தமிழகத்திற்கு துரோகம் செய்தது ஏன்? என்பதை தி மு க விளக்குமா? என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது ;- இந்த வருடம் தமிழகத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய். 900 கோடியும், நகர்ப்புற வெள்ள தடுப்பு மேலாண்மை நிதிக்காக ரூபாய் 561.29 கோடியும் ஏற்கனவே கொடுத்து விட்டது மத்திய அரசு. மேலும், வெள்ள பாதிப்புகள் குறித்து முழு ஆய்வும் செய்து தரவுகளை மாநில அரசு விரைவில் அளித்தால் தேசிய பேரிடர் நிவாரண நிதி அல்லது உரிய துறைகளின் மூலம் நிதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.
தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்த போது (2012-13) அன்றைய தமிழக மாநில அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய். 19,665 கோடி ரூபாய் வழங்குமாறு கேட்டும், அன்றைய தி மு க – காங்கிரஸ் அரசு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய். 121 கோடி மட்டுமே அளித்ததோடு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய். 624 கோடி ரூபாயை மட்டுமே வழங்கியது ஏன் என்ற கேள்விக்கான பதிலை சொல்லி விட்டு தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும், திமுகவினரும் இன்றைய மத்திய பாஜக அரசின் மீது குறை சொல்லட்டும், கேள்விகளை கேட்கட்டும். மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தை வஞ்சித்து ஏன்? தமிழகத்திற்கு துரோகம் செய்தது ஏன்? என்பதை தி மு க விளக்குமா?, என கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.