டிரெண்டிங்

மகன் இறந்தது கூட தெரியாமல் 3 நாட்களாக பசியால் தவித்த பார்வையற்ற தம்பதி : சோக சம்பவம்!

மகன் வந்து உணவு கொடுப்பான் என அவர் இறந்ததை கூட தெரியாமல் 3 நாட்களாக பசியால் தவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியின் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாகோல் நகரில் உள்ள ஜெய்ப்பூர் ஆந்திரா காலனியில் ரமணா (65), சாந்தகுமாரி (60) என்ற வயதான பார்வையற்ற வயதான மாற்றுதிறனாளி தம்பதியினர் தங்கள் இளைய மகனுடன் வசித்து வருகின்றனர்.

பார்வையற்ற தம்பதிக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் பிரதீப் மனைவி குழந்தைகளுடன் வேறு இடத்தில் வசித்து வருகிறார்.

இளைய மகன் பிரமோத்திற்கு (30) திருமணம் ஆனாலும் சில காரணங்களால் அவரது மனைவி அவரை விட்டு சென்றுவிட்டார். இதனால் பெயிண்டர் வேலை செய்யும் பிரமோத் மதுவுக்கு அடிமையானலும் தனது பார்வையற்ற பெற்றோரை நல்லபடியாக கவனித்து கொண்டு வந்தார்.

இந்நிலையில் பிரமோத் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு உணவு வழங்கி பின்னர் தூங்க சென்றுள்ளார்.

அதன் பிறகு எழுதிருக்கவில்லை தூக்கத்திலேயே பிரமோத் இறந்து விட்டார். இதனை அறியாத வீட்டில் இருந்த பார்வையற்ற பெற்றோரால் தங்கள் மகன் இறந்துவிட்டதை அடையாளம் காண முடியவில்லை.

எத்தனை முறை போனில் யாரும் அழைத்தாலும் பதில் சொல்லவில்லை. இதனால் பசியுடன் உணவு மற்றும் தண்ணீர் கேட்டு துடித்தனர். ஆனால் யாரும் பேசவில்லை முதுமையில் இருக்கும் பார்வையற்ற நிலையில் நிர்க்கதியாக இருந்தனர். குறைந்த பட்சம் அக்கம்பக்கத்தினர் கூட யாரும் வந்து பார்க்க வரவில்லை.

இதனால் ஒரு பக்கம் துர்நாற்றம், இன்னொரு பக்கம் பசியால் இருந்தனர். இந்நிலையில் இறந்து மூன்று நாட்கள் அனதால் , சடலம் அழுகிய நிலையில் வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியது. துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நாகோல் இன்ஸ்பெக்டர் சூர்யநாய்க், எஸ்.ஐ சிவநாகபிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்த போது ஒரு பக்கம் பசியால் துடிக்கும் வயதான மாற்றுதிறனாளி தம்பதி, மறுபுறம் தாங்க முடியாத துர்நாற்றம் என தவித்தவர்களை வீட்டின் வெளியே அழைத்து வந்தனர்.

பின்னர் வயதான தம்பதியினரை குளிப்பாட்டி உணவு வழங்கினர். பின்னர் அவர்களது இளைய மகன் பிரமோத் இறந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.

பிரமோத்திற்கு வலிப்பு நோய் உள்ளதால் தூக்கத்தில் இருக்கும் போது வலிப்பு ஏற்பட்டு பிரமோத் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிரமோத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் மற்றொரு மகன் பிரதீப்பை வரவழைத்த போலீசார் வயதான தம்பதியை அவரிடம் ஒப்படைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

10 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

10 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

10 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

11 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

12 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

12 hours ago

This website uses cookies.