சென்னை கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே எனும் பிரபல உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில், கடையின் ஊழியர், வாடிக்கையாளர்கள் மற்றும் டெலிவரி பாய் என மொத்தம் 8 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், பையில் குண்டை வைத்து தாககுதல் நடத்திய நபரின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் கோவையில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து, தலைமை செயலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன், வெடிகுண்டு தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். ஆனால், எந்தப் பொருளும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சென்னை கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறை மின்னஞ்சல் முகவரிக்கு bomb blast in Chennai temple soon என்று jaffersait@outlook.com என்ற இமெயில் முகவரி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து. சென்னை பெருநகர காவல்த்துறையை தொடர்புகொண்டு பெங்களூரு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ள நிலையில்,மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பல கோயில்களில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் வந்துள்ளது. அதாவது, ‘Bomb Blast in Chennai Temple Soon’ என jaffersait@outlook.com என்ற இமெயில் முகவரி மூலம் மிரட்டல் விடுக்கும் மெயில், பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.