பள்ளி மாணவர்களுக்கு நாளை பாடப்புத்தகங்கள் விநியோகம்…! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
2 August 2020, 8:16 pmசென்னை: பள்ளி மாணவர்களுக்கு நாளை பாடப்புத்தகங்களை விநியோகிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது தமிழகத்தில் 7ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
இதனிடையே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை தர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் இந்த பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சமூக விலகலுடன் தலா 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பாடப்புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.