தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் போனக்கல் பகுதியில் அசோக் என்பவர் சாய்பாபு கோயில் முன்பு தனது மனைவியுடன் பிச்சை எடுத்து வருகிறார்.
பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வரும் அவர் தனது மகள் படிப்பிற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்தார். இந்நிலையில் ஓட்டல் அதிபர் நரசிம்மராவ் என்பரின் ஓட்டலுக்கு சாப்பிட செல்லும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தில் நரசிம்மராவ் உன்னிடம் பணம் இருந்தால் தன்னிடம் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக கூறி உள்ளார்.
இதனால் அசோக் வட்டிக்கு ஆசை பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைத்திருந்த ₹ 50,000 கடனாக வாங்கினார். இதற்கான வட்டியை சில மாதம் கொடுத்த நரசிம்மராவ் அதன்பிறகு வட்டி கட்டவில்லை. பணம் கட்டால் நரசிம்மராவ் கடனைத் திருப்பித் தர மறுத்துவிட்டார்.
இந்நிலையில் நரசிம்மராவ் பல இடங்களில் கடன் வாங்கியதால் ₹ 1.95 கோடி கடன் ஏற்பட்ட நிலையில் பிச்சைக்காரர் அசோக்குடன் சேர்த்து 69 பேருக்கு வழக்கறிஞர் மூலம் பணத்தை திருப்பி தர முடியாது என்னிடம் எதுவும் இல்லை என ஐபி நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்காக கம்மம் சிவில் நீதிமன்றத்தில் திவால் மனு வழக்கு தாக்கல் செய்தார். அதில் ₹ 1 கோடியே 95 லட்சம் கடன் வாங்கிய நிலையில் அதனை கட்டும் நிலையில் இல்லை என 69 பேருக்கு ஐபி நோட்டீஸ் கொடுத்துள்ளார். நோட்டீஸ் பெற்றவர்களில் பிச்சைக்காரன் அசோக் பலரும் கண்ணீருடன் உள்ளனர்.
வியாபாரி நரசிம்மராவ்வை நம்பி பல வருடங்களாக சேமித்து வைத்திருந்த பணத்தை வழங்கினால் இப்படி ஏமாற்றி விட்டதாக பிச்சைக்காரர் அசோக் கூறி உள்ளார்.
அசோக், தன் மகள் படிக்க சேமித்த பணத்தை பெற்று தர வேண்டும் என கூறும் நிலையில் நரசிம்மராவ் பிச்சைக்காரை கூட விட்டு வைக்காமல் கடன் பெற்று ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.