இரும்பு திருடிய இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் : 23 வயது இளைஞர் பலியான கொடூரம்… அதிர்ச்சியில் தலைநகரம்!!

சென்னை : கட்டிட வேலை நடந்த போது இரும்பு திருடியதாக 23 வயது இளைஞர் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை, தாடண்டர் நகர் மைதானம் அருகே புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

கட்டிடம் கட்டதேவையான இரும்பு கட்டுமான பொருட்களும் அங்கே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் கட்டிட பகுதிக்கு சென்று அங்கிருந்த இரும்பு பலகையை திருடிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றது.

இதை அங்கு தங்கியிருந்த தொழிலாளி ஒருவர் பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு தங்கிஇருந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் ஒன்றிணைந்து கொள்ளையர்களை விரட்டினர். அப்போது, இருசக்கர வாகனத்தின் நடுவே அமர்ந்திருந்தவர் தப்பினார்.

வாகனத்தை ஓட்டியவர், பின்னால் அமர்ந்து திருடப்பட்ட இரும்புபலகையை பிடித்துக் கொண்டிருந்தவர் என இருவர் தொழிலாளர்களிடம் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, பிடிபட்ட திருடர்கள் இருவரையும் கட்டி வைத்து இரும்புகம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில், இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றனர். இதற்கிடையில், இருசக்கர வாகனத்திலிருந்து தப்பியவர் நடந்த சம்பவம் குறித்து பிடிபட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் சைதாப்பேட்டை போலீஸாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து சைதாப்பேட்டை போலீஸார் சம்பவ இடம் விரைந்து பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில், இரும்பு திருடச் சென்றது சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சாகின்ஷா காதர் (வயது 23), அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஹேமநாதன் (வயது 20) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

இதில், நடுவில் அமர்ந்த ஹேமநாதன் தப்பி ஓடிய நிலையில் இருசக்கரவாகனத்தை ஓட்டிய 16 வயது சிறுவன், திருடப்பட்ட இரும்புபலகையை பின்னாலிருந்து பிடித்திருந்த சாகின்ஷா காதர் இருவரும் பிடிபட்டு தாக்குதலுக்கு ஆளாகினர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சாகின்ஷா காதர் உயிரிழந்தார். 16 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை தொடர்பாக கட்டிட பொறியாளர்களான உமா மகேஷ்வரன் (வயது 33), ஜெயராம் (வயது 30), நம்பிராஜ் (வயது 29), பாலசுப்பிரமணியன் (வயது 29), சக்திவேல் (வயது 29), மனோஜ் (வயது 21), அஜித் (வயது 27), தொழிலாளி சிவபிரகாசம் (வயது 22) ஆகிய 8 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.