ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தின் ஆத்மகூர் பேருந்து நிலையத்திலிருந்து, அரசுப் பேருந்து திருடப்பட்டதாக காவல்துறையிடம் நிர்வாகம் புகார் அளித்தது.அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் ஒருவர் பேருந்தில் ஏறி பேருந்தை இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பேருந்து முச்சுமாரி கிராமத்துக்கு அருகில் பேருந்து காவல்துறை அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.
வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துர்க்கையா. லாரி டிரைவரான இவர், சரக்குகளுடன் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பல நாள்கள் கழித்து வரும் வழக்கமுடையவர். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல லாரியை விட்டு விட்டு, தன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். ஆனால், வீட்டில் அவர் மனைவி இல்லை.
அக்கம் பக்கத்தினர் தாயார் வீடு இருக்கும் முச்சுமரிக்கு அவர் மனைவி சென்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மனைவியின் கிராமத்துக்குச் செல்ல வாகன வசதி இல்லை என்பதால், ஆத்மகூர் பேருந்து நிலையத்தில், சாவியுடன் இருந்த பேருந்தை எடுத்துக்கொண்டு துர்க்கையா தன் மனைவி இருக்கும் கிராமத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மாமியார் வீட்டுக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தை திருடி, ஓட்டிச் சென்ற நபர் குறித்து நெட்டிசன்கள் பலரும் கமென்ட்களைத் தெரிவித்து வருகின்றனர்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.