சிஏஜி அறிக்கையே வேற… ஊழல் இல்லாத ஆட்சியை பிரதமர் மோடி நடத்துகிறார் : ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து!!
சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து உரிய பதில் அளிக்கப்படும் என்று புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“திட்டங்கள் தாமதமாகும் போது அல்லது மாற்றங்கள் செய்யப்படும் போது அதற்கான செலவுகள் அதிகரிக்கும். அதைத் தான் சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிடுகிறது.
இது குறித்து உரிய பதில் அளிக்கப்படும். பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது உலகத்திற்கே தெரியும்.
மகளிர் இடஒதுக்கீடு நிச்சயமாக செயல்பாட்டுக்கு வரும். ஆனால் எதிர்கட்சியினர் வராது என்று சொல்கிறார்கள். அவர்களின் எதிர்மறை எண்ணத்தை இது காட்டுகிறது.
இத்தனை காலமாக மகளிர் இடஒதுக்கீடு வருமா, வராதா என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது அதற்கான ஒரு கால வரையறை நமக்கு தெரியவந்திருக்கிறது.” இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
This website uses cookies.