சிஏஜி அறிக்கையே வேற… ஊழல் இல்லாத ஆட்சியை பிரதமர் மோடி நடத்துகிறார் : ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து!!
சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து உரிய பதில் அளிக்கப்படும் என்று புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“திட்டங்கள் தாமதமாகும் போது அல்லது மாற்றங்கள் செய்யப்படும் போது அதற்கான செலவுகள் அதிகரிக்கும். அதைத் தான் சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிடுகிறது.
இது குறித்து உரிய பதில் அளிக்கப்படும். பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது உலகத்திற்கே தெரியும்.
மகளிர் இடஒதுக்கீடு நிச்சயமாக செயல்பாட்டுக்கு வரும். ஆனால் எதிர்கட்சியினர் வராது என்று சொல்கிறார்கள். அவர்களின் எதிர்மறை எண்ணத்தை இது காட்டுகிறது.
இத்தனை காலமாக மகளிர் இடஒதுக்கீடு வருமா, வராதா என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது அதற்கான ஒரு கால வரையறை நமக்கு தெரியவந்திருக்கிறது.” இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.