விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டிருந்தார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணிப்பபதாகவும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளதால் போட்டியிடவில்லை என அதிமுக விளக்கமளித்திருந்தது.
இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் கடந்த பல தேர்தல்களில் பா.ம.க. மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.
அதனால் இந்த தேர்தலிலும் பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பாம.க இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.