ஆந்திரா : காவல் நிலையத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்ய கோரிய 6 வயது சிறுவன் செய்த செயல் காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
சித்தூர் மாவட்டம் பலமனேர் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வரும் 6 வயது சிறுவன் கார்த்திகேயன். இன்று பலமனேர் காவல் நிலையத்திற்கு சென்ற கார்த்திகேயன் காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஆய்வாளர் பாஸ்கரை நேரில் சந்தித்து எங்கள் பள்ளி அருகே சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் தொடர்ந்து குழி தோண்டி வருகின்றனர்.
மேலும் அங்கு டிராக்டர்களை சாலையின் குறுக்காக நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர். எனவே நீங்கள் வந்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டான்.
அவன் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த போலீசார் இனிப்புகளை கொடுத்தனர். பின்னர் நாங்கள் வந்து போக்குவரத்தை சரி செய்வோம் என்று கூறி அவனை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.