நீர்பாசனத் திட்டத்திற்கு ரூ. 44 ஆயிரம் கோடி…போக்குவரத்து உட்கட்டமைப்புகளுக்கு ரூ.20,000 கோடி : மத்திய பட்ஜெட்டின் முழு விபரம்..!!

Author: Babu Lakshmanan
1 February 2022, 1:07 pm
FM - updatenews360
Quick Share

டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

2வது ஆண்டாக மின்னனு முறையில் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பின்வருமாறு :-

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்து இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை இந்தியா திடமாக எதிர்கொண்டுள்ளது

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா மாறி வருகிறது

நடுத்தர வகுப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது

அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பட்ஜெட்டாக நடப்பாண்டின் பட்ஜெட் இருக்கும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.2%ஆக இருக்கும் என கணிப்பு

உற்பத்திக்கான ஊக்கத்தொகைத் திட்டம் நல்ல பலனை அளித்து வருகிறது

அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை

சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புகள் இருக்காது

எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும்

வரும் நிதியாண்டில் புதிதாக 25,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்க இலக்கு

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய ரயில்கள் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும்

ரயில்நிலையங்களையும், நகர்ப்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரியளவில் திட்டம்

போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

நாட்டில் 1.63 கோடி விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன

நாடு முழுவதும் ரசாயன உரங்களின் பங்களிப்பு இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்

உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை

வேளாண் பொருட்களுக்கு ரூ.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது

புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

கிருஷ்ணா நதி – பெண்ணாறு – காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்

ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுள்ளது

அவசர கால கடன் உதவி திட்டங்கள் மூலம் 1.30 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெற்றுள்ளன

வேளாண் நிலங்களை அளவீடு செய்ய டிரோன்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும்

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்க நடவடிக்கை

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசர கால கடன் வழங்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

‘ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி’ என்ற திட்டத்தின் கீழ் தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்த புதிதாக 200 கல்வி சேனல்கள் உருவாக்கப்படும்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீள அறிமுகம் செய்யப்பட்ட ECLGS திட்டம் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

காதி சக்தி திட்டத்தின் கீழ் 100 புதிய சரக்குப் போக்குவரத்து முனையங்கள் ஏற்படுத்தப்படும்

நாடு முழுவதும் 2023ம் ஆண்டுக்குள் 18 லட்சம் வீடுகள் குறைந்த விலையில் கட்டப்படும்

பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்கள் வரும் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

எல்லையோர கிராமங்கள், திறன்மிக்க கிராமங்களாக நவீன நுட்பத்துடன் தரம் உயர்த்தப்படும்

தபால் அலுவலக கணக்கில் இருந்து வங்கி கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி

மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

நாட்டில் 75 மாவட்டங்களில் பரிட்சார்த்த முயற்சியாக இ-பேங்கிங் அறிமுகம் செய்ப்படும்

நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்

ஊரக மற்றும் வேளாண் சார்பு தொடக்க நிறுவனங்கள் (Startups) பயன்பெறும் விதமாக நபார்ட் வங்கி மூலம் கடனுதவி

ஒவ்வொரு வீட்டிற்கும் தூய்மையான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பத்திரப்பதிவை எளிதில் மேற்கொள்ளும் விதமாக, ‘ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு’ என்னும் திட்டத்தை கொண்டு வர திட்டம்

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

பசுமையாற்றல் மற்றும் மாசற்ற போக்குவரத்து வசதிகள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

பசுமையாற்றல் துறைகள் மூலம் இந்தியா நவீனமாவதுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்க உதவும்

பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் ரூபாய் நாணயம் ரிசர்வ் வங்கியால் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது

நீர்பாசனத் திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

சூழல் பாதுகாப்புடன் 5ஜி தொலைத்தொடர்பு திட்டம் செயல்படுத்தப்படும்

2023ம் ஆண்டுக்குள் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில்பாதைகள் அமைக்க திட்டம்

நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.9% ஆக உள்ளது. 2022-23ம் ஆண்டின் நிதி பற்றாக்குறை 6.4%ஆக கணிப்பு

திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை 2 ஆண்டுகள் வரை தாக்கல் செய்யலாம்

ராணுவத்திற்கான பட்ஜெட் மதிப்பில் 25% நிதி பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும்

மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்

ஆடை தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரி குறைப்பு

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்வது குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை

Views: - 1182

0

1