கோவை : போதைப்பொருளை பயன்படுத்தாதீர்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் நிலைமை சீரழிந்து இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விசர்ஜன ஊர்வலத்தை துவக்கி வைத்த மீன் வளம், கால்நடை, பால்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று துவக்கி வைக்க வந்திருந்தார். அப்போது,அவர் தனியார் ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,அவர் தமிழக முதல்வர் என்பவர் அனைவருக்கும் சமமானவர்.பொதுவானவர். திமுக தலைவராக விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், தமிழக முதல்வராக மக்களுக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கலாம். அது அவரது கடமையும் கூட.அந்த கடமையில் இருந்து அவர் தவறியிருக்கிறார்.இனிவரும் காலங்களிலாவது அவர் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்துக்களை சொல்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும்,குஜராத் தான் போதைப்பொருட்களின் ஹப் ஆக் உள்ளது என்ற அமைச்சர் பொன்முடியின் கருத்து குறித்து பதிலளித்த அவர் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை.போதைப்பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை.தமிழகத்தில் இன்று போதைப்பொருள் தலைவிரித்தாடிக்கொண்டு இருக்கிறது. கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் நிலைமை சீரழிந்து இருக்கிறது.
குஜராத்திற்கு பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் வருகிறது.அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வெளியுலகத்திற்கு காட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.தமிழக அரசு போல் மூடி மறைக்கவில்லை. இதுபோன்ற வீணான ஒரு அரசியலை விட்டு விட்டு கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
தமிழக அரசு சிறப்புக்குழுவினை அமைத்து இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து உள்ளது.தமிழகத்தில் காவலருக்கு பாதுகாப்பில்லை.ஜெயிலருக்கு பாதுகாப்பில்லை. சட்டம், ஒழுங்கை சீர் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.