நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால் சந்திரபாபு நாயுடு ஆதரவு கட்டாயமாகி உள்ளது. அரசியலில் பல ஆண்டுகால அனுபவசாலியான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்திற்கு தேவையானவற்றை கேட்பதில் கில்லாடியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ஜ.க.வுக்கு அவர் சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் மத்திய அமைச்சரவையில் மூன்று கேபினட், இரண்டு இணை அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
குறிப்பாக சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சிக்கு தர வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.கடந்த 2009-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பால யோகி மக்களவை சபாநாயகராக இருந்தார்.
அதேபோல இந்த முறையும் சபாநாயகர் பதவி தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இதேபோல நிதித்துறை, வேளாண்மைத்துறை, நீர்வளத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சுகாதரம், கல்வித்துறை உள்ளிட்ட மந்திரி பதவிகளை தெலுங்கு தேசம் கட்சி கேட்டு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விரும்பும் இாக்காகள் அடங்கிய பட்டியலை தெலுங்கு தேசம் சார்பில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.