சென்னை : தாம்பரம் அருகே திமுக கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம், எட்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (30). திமுக-வைச் சேர்ந்த இவர், நடுவரப்பட்டு ஊராட்சியின் 7வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் திமுக கவுன்சிலர் சதீஷ், கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சதீஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சதீஷைக் கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது, கவுன்சிலர் சதீஷ் தான் குடியிருக்கும் பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தியதாகவும், அதனால் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், சதீஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் தரப்பு, கவுன்சிலர் சதீஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில், சதீஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனிடைய, திமுக கவுன்சிலர் சதீஷின் கொலையை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.