தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு… வார இறுதியில் இப்படியா..? ஏமாற்றத்தில் வாடிக்கையாளர்கள்!!

Author: Babu Lakshmanan
11 February 2023, 10:33 am
Gold Rate - Updatenws360
Quick Share

வார இறுதியில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 42,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,340க்கு விற்பனையானது. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.72.70க்கு விற்பனையாகிறது.

Views: - 299

0

0