சென்னையில் வெள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கிய நிலையில், அதில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி வருகிறது. அதனை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இப்படியிருக்கையில், இன்று 2வது நாளாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் கீழே கணேசபுரம் பகுதியில் மழைநீரில் பயணிகளுடன் அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டது. இதனால், பேருந்தில் இருந்தவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர். பின்னர், இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் பொதுமக்களின் உதவியுடன் மக்களை மீட்டனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் வேகமாக அகற்றப்பட்டு விட்டாலும், பெரும்பாலான இடங்கள் மழையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.