சென்னை : சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரொக்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை, நெல்லை, திருப்பூர், திருச்சி என பல்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக 4 பேரின் வீடுகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் 15 லட்சம் ரூபாய் ரொக்கம், 150 செல்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் கேஜெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்…
திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நடிகர் விஜயின் 51 வது…
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது எடஸ்ட் போட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ் இந்திய அணி 587 ரன்கள்…
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
This website uses cookies.