சென்னையில் ஓடும் ரயிலில் இளம்பெண் எதிரே சுயஇன்பத்தில் வாலிபர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்ற இளம்பெண், கடந்த 9ம் தேதி பணிக்கு சென்றுவிட்டு, மின்சார ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெண்கள் மட்டுமே பயணிக்கும் பெட்டியில் அவருடன் மேலும் இரு பெண்கள் இருந்தனர்.
அப்போது, மீனம்பாக்கம் ரயில்நிலையத்தில் ரயில் நின்ற போது, இளைஞர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏறி அமர்ந்தார். அப்போது, அங்கிருந்தவர்கள் எதிர்பார்க்காத நிலையில், திடீரென அந்த நபர் சுயஇன்பத்தில் ஈடுபடத் தொடங்கினார். இதைக் கண்ட பெண்கள் திடுக்கிட்டு போகினர்.
இதைத் தொடர்ந்து, சட்டென்று தனது செல்போனை எடுத்த ரேணுகா, அந்த நபரை வீடியோ எடுத்தபடி, சத்தம் போட ஆரம்பித்தார். தனது செல்போனில் வீடியோ எடுத்து அந்த ஆண் நபரை திட்டி சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த நபர் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட ரேணுகா, தாம்பரம் ரயில்நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து அந்த நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்தான் (23) அந்த நபர் என்பதை உறுதி செய்து, கைது செய்தனர். அவரும், ரயிலில் பெண்கள் முன் ஆபாசமாக நடந்ததை ஒப்புக் கொண்டதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
GALATTA நிறுவன பெண் ஊழியர் முன் "MAST*BATE" செய்த இளைஞர்.! Chennai Local Train | Guindy to TambaramGALATTA நிறுவன பெண் ஊழியர் முன் "MAST*BATE" செய்த இளைஞர்.! Chennai Local Train | Guindy to Tambaram #LocalTrain #Guindy #Tambaram
Posted by Galatta on Sunday, February 13, 2022
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.