சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது, இந்திய விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை காண மக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். அதன்படி லட்சக்கணக்கான மக்கள் கூடினர். அரசு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத காரணத்தால் லட்சக்கணக்கானோர் மெரினா பீச்சில் கூடியதால் கூட்ட நெரிசலில் பல பேர் உயிரிழந்தனர்
அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்பத்திற்கு ஆளானார்கள். நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருவது செய்தி வாயிலாக தெரிகிறது.
முதலமைச்சரின் அறிவிப்பு காரணமாக தான் லட்சக்கணக்கானோர் குடிநீர் தகவலை எவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தகவல் பெற்று தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் அடிப்படை வசதிகள் செய்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது.
முதலமைச்சரின் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு துன்பம் தான் மீதம். அரசின் செயலற்றுத் தன்மை கையாளாகாத தன்மையை காட்டுகிறது இது வெட்கக்கேடான விஷயம்.
இதேபோன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். அமைச்சர் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறுகிறார்.
அரசு என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும். இதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஏற்க வேண்டும். ஏனென்றால் இவர் தான் அழைப்பு விட்டார்.
இது அரசின் அலட்சியம். ஒரு நிகழ்ச்சியை கூட நடத்த முடியாத அரசாக உள்ளது. அரசின் கவனக்குறைவால் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து சாகச நிகழ்ச்சி பார்த்தனர் என குற்றம்சாட்டினார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.