சென்னை ; காஞ்சிபுரம் அருகே சென்னை மேயர் பிரியா சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேயர் பிரியா சென்ற கார் விபத்துக்குள்ளானது. முன்னாள் சென்ற கார் திடீரென திரும்பியதால் பின்னால் சென்ற மேயர் பிரியாவின் கார் அதன்மீது பயங்கரமாக மோதியது. பின்னால் வந்த லாரியும் மேயர் பிரியா சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கார் ஓட்டுநர் லேசாக காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக மேயர் பிரியா காயமின்றி தப்பினார். பின்னர், மாற்றுக் கார் வரவழைத்து மேயர் பிரியா புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.