சென்னை ; சென்னையில் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பின்னணியில் ஒழித்த பாடலால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கோபமடைந்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, பாஜக என தனித்தனியே கூட்டணிகளை அமைத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. அண்மையில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்த சீமான் நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம், வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், இந்த முறை மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. முதலில் இந்த சின்னத்தின் மீது சீமான் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்ததால், மைக் சின்னத்திலேயே போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் சீமான் வெளியிட்டார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்த ஒரு சம்பவம் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை கொதிக்க வைத்துவிட்டது.
அதாவது சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசும் போது, சீமானுக்கு பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங் டோன், ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு என்கிற பாடலுடன் ரொம்பவே சப்தமாக அலறியது. இதனால், கடுப்பான சீமான், திரும்பி பின்னால் இருந்தவரை முறைத்ததால், அவர் அங்கிருந்து சத்தம் இல்லாமல் கிளம்பி விட்டார்.
தங்களின் சின்னமான கரும்பு விவசாயி கிடைக்காத நிலையில், வேறு வழியின்றி மைக் சின்னத்துடன் போட்டி போட முடிவு செய்த சீமானை கிண்டல் செய்யும் விதமாகவே அந்த செய்தியாளர் சந்திப்பில் நடந்த நிகழ்வு அமைந்திருந்தது. அதுமட்டுமில்லாமல், மைக் சின்னத்தை நாம் தமிழர் கட்சி தேர்வு செய்துவிட்ட நிலையில், ரத்த கொதிப்பு பாடலில் வரும் வரிகளும் தம்பிகளை எரிச்சலடையச் செய்துள்ளது.
இந்த நிகழ்வுக்கு பிறகு மைக் சின்னம் பிரபலமானதோ இல்லையோ, அந்த கானா குரூப்பின் பாடல் படுவைரலானதது மிச்சம் என்று உச்சு கொட்டுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.