கொரோனா கால தற்காலிக செவிலியர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படாது என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்து சேலத்தை தொடர்ந்து சென்னையிலும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா சமயத்தில் மருத்துவ தேர்வு ஆணையத்தின் மூலம் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட தங்களுக்கு, தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சேலத்தில் செவிலியர்கள் 3 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமைதியான முறையில் நடைபெற்ற இந்தக் காத்திருப்பு போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று மாலை போராட்டம் நடத்திய செவிலியர்களை கைது செய்த போலீசார், அவர்களை தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், இன்று அதிகாலை 3 மணியளவில் செவிலியர்கள் மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். போலீசாரின் வாகனத்தில் ஏற மறுத்த அவர்கள், சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு நடந்தே சென்றனர்.
எத்தனை தடைகள் போட்டாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை மாற்றுவழியில் போராட்டத்தை தொடர்வோம் என்று செவிலியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.