3வது நாளாக தொடரும் பெத்தேல் நகர் மக்களின் போராட்டம் : குடியிருப்புகளை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தொடரும் எதிர்ப்பு

குடியிருப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்தும், பட்டா வழங்க வலியுறுத்தியும் சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நீர்நிலைகளை ஆக்கிரமித்து இந்த வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுமாறு 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, பெத்தேல் நகரில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஆண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை வாங்க மறுத்த அப்பகுதி மக்கள், பட்டா வழங்குமாறு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, வருவாய்த்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெத்தேல் நகருக்கு சென்றனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இசிஆர் சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு, பகல் பாராமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாங்கள் இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை வீடுகளுக்கு செல்லாமல் சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என பெத்தேல் நகர் மக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, காலம் காலமாக பெத்தேல் நகரில் வசித்துவரும் மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் போராட்டத்திற்கு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருவதால், பெத்தேல் நகர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ஊழலில் 9 அமைச்சர்கள்.. ஒருத்தருக்கு ஒருமாசம் என்றாலும்… முதலமைச்சரை கடுமையாக சாடிய தமிழிசை!

தமிழகத்தில் வருங்காலம் மாற்றம் ஏற்பட வேண்டும். 2026 தமிழக மக்கள் முழுமையாக பலன் பெற வேண்டும் இன்றைய ஆட்சியில் ஏறக்குறைய…

7 hours ago

செல்லூர் ராஜூ உருவபொம்மை எரிப்பு.. மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் என அறிவிப்பு : என்ன நடந்தது?

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிகொண்டா சாலை பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் தமிழக ஒருங்கிணைந்த முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீரமங்கை…

8 hours ago

ரெட்ரோ பூஜாவுக்கு கருப்பு பெயிண்ட் மேக்கப் மோசம்.. பங்கமாய் கலாய்த்த விஜய் பட நடிகை!

பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உள்ளார். இவர் அண்மையில் நடித்த ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக…

8 hours ago

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம்… கோவையில் பகீர் சம்பவம்!!

கோவை வெள்ளலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறை அவரை பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு…

9 hours ago

உங்க படத்தை விளம்பரம் செய்ய பெருமாள் தான் கிடைச்சானா? சந்தானம் மீது பாஜக புகார்!

காமெடி நடிகரான சந்தானம் தற்போது நடித்தால் ஹீரோதான் என்ற பாணயில் அண்மைக்காலமாக நடித்து வருகிறார். படம் ஒடுதோ இல்லையோ, வருடத்திற்கு…

10 hours ago

போதைக்காக ஒரே வருடத்தில் ரூ.70 லட்சம் செலவு… வசமாக சிக்கிய பெண் மருத்துவர்!!

ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல பெண் மருத்துவர் நம்ரதா சிகுருபதி. ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் இயக்குனராக பணியாற்றிய நம்ரதா…

10 hours ago

This website uses cookies.