ஓடும் ரயிலில் பெண் முன்பு மோசமான செயலில் காவலர் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மின்சார ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அதே ரயிலில் பயணித்த நபர் ஒருவர், அந்த பண் முன்பு அமர்ந்து கொண்டு மோசமான செயலில் ஈடுபட்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தைரியத்துடன் அந்த நபரை வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
இதைக் கண்ட அந்த நபர் பல்லாவரம் ரயில் நிலையம் வந்தவுடன் இறங்கி ஓட்டம் பிடித்தார். பின்னர், இது தொடர்பாக கடந்த 14ம் தேதி அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தாம்பரம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் இரும்புலியூரை சேர்ந்த கருணாகரன் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓடும் ரயிலில் பெண்ணிடம் போலீஸ்காரரே சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.