ஓடும் ரயிலில் பெண் முன்பு மோசமான செயலில் காவலர் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மின்சார ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அதே ரயிலில் பயணித்த நபர் ஒருவர், அந்த பண் முன்பு அமர்ந்து கொண்டு மோசமான செயலில் ஈடுபட்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தைரியத்துடன் அந்த நபரை வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
இதைக் கண்ட அந்த நபர் பல்லாவரம் ரயில் நிலையம் வந்தவுடன் இறங்கி ஓட்டம் பிடித்தார். பின்னர், இது தொடர்பாக கடந்த 14ம் தேதி அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தாம்பரம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் இரும்புலியூரை சேர்ந்த கருணாகரன் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓடும் ரயிலில் பெண்ணிடம் போலீஸ்காரரே சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.