ஓடும் ரயிலில் பெண் முன்பு மோசமான செயலில் காவலர் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மின்சார ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அதே ரயிலில் பயணித்த நபர் ஒருவர், அந்த பண் முன்பு அமர்ந்து கொண்டு மோசமான செயலில் ஈடுபட்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தைரியத்துடன் அந்த நபரை வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
இதைக் கண்ட அந்த நபர் பல்லாவரம் ரயில் நிலையம் வந்தவுடன் இறங்கி ஓட்டம் பிடித்தார். பின்னர், இது தொடர்பாக கடந்த 14ம் தேதி அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தாம்பரம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் இரும்புலியூரை சேர்ந்த கருணாகரன் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓடும் ரயிலில் பெண்ணிடம் போலீஸ்காரரே சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.