சென்னை ; சென்னை அருகே நள்ளிரவில் ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம்புரண்ட விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள் நடக்கும் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நள்ளிரவில் 12 மணியளவில் ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டது. பின்னர், ரயில் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு புறப்பட்டு சென்றது.
பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் வந்த போது, ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது.இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
பின்னர், 2 மணிநேர போராட்டத்திற்கு பின் ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் தண்டவாள நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.