தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதி இல்லாத காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இதற்கான நிலமெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.
சென்னையின் 2 வது விமான நிலையமான பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ)மேற்கொண்டு வருகிறது.இந்த விமான நிலையம் அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு டிட்கோ கடிதம் அனுப்பி இருந்தது.
மாநில அரசின் இந்த பரிந்துரையை ஏற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது இந்த தகவலை மாநிலங்களவையில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு தெரிவித்தார். அவர் தன்னுடைய பதிலில் இந்த பரிந்துரை தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது இந்த ஆலோசனைக்கு பின் பசுமை வழி விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு முன்பு இந்த பரிந்துரை முன் வைக்கப்பட்டது.
இந்த பரிந்துரையை ஆய்வு செய்த குழு சில வழிகாட்டுதல்களோடு பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி அளித்துள்ளது. ஆயினும் பசுமை வழி விமான நிலைய கொள்கைகளின் படி நிதி அளித்தல் மற்றும் நிலம் கொள்முதல் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு டிட்கோவைச் சார்ந்தது என மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு தனது பதில் தெரிவித்துள்ளார்
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.