திருவள்ளூர் : நரிக்குறவர்களுக்கு நலத்திட்டம் வாங்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மாணவியின் வீட்டுக்கு சென்று சிற்றுண்டி அருந்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
அதன்படி, நரிக்குறவர்களுக்கு ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும், திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் முதலமைச்சருடன், நரிக்குறவர் மக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற முதலமைச்சர், மாணவிகளுடன் கலந்துரையாடினர்.
இதன்பின் ஆவடியில் நரிக்குறவ மாணவி இல்லத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இட்லி, வடை உள்ளிட்ட காலை சிற்றுண்டி அருந்தினார். மேலும் நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.