கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்ய முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
தஞ்சை அடுத்த வல்லத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 70 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்க அல்ல தான் கொள்ளையடித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய சென்றிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
இந்த அரசு விவசாயிகளை எதிரி போல் பார்க்கிறது. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி காய்ந்து குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்து இருந்தால் விவசாயிகளுக்கு 84,000 கிடைத்திருக்கும்.
இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துவிட்டார்கள். கெடுக்க நினைத்தவர்கள் கெட்டுவிட்டார்கள். டெல்டா மாவட்டங்களுக்கு வந்த பிறகுதான் தெரிகிறது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுகவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி: பழனிச்சாமிக்கு வல்லத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.