மீனவர்கள் விவகாரம் : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!

Author: kavin kumar
23 February 2022, 9:33 pm
Quick Share

சென்னை : இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மற்றும் அவர்களது உடமைகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்துவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்திற்குப் புறம்பான செயல் மட்டுமல்லாது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும் உள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள், உடைமைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை காவலில் உள்ள 29 தமிழக மீனவர்கள், 82 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Views: - 626

0

0