உலகமே உங்களுக்காக காத்திருக்கிறது… தீரன் சின்னமலை கல்லூரியில் புதிய கட்டடம் திறந்து வைத்து முதலமைச்சர் உரை!!!

உலகமே உங்களுக்காக காத்திருக்கிறது… தீரன் சின்னமலை கல்லூரியில் புதிய கட்டடம் திறந்து வைத்து முதலமைச்சர் உரை!!!

திருப்பூர் வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதன்பின் உரையாற்றிய முதலமைச்சர், தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும், எழுச்சியும் வருகிறது. உடல்நிலையை கருத்தில் கொண்டு காணொளிக்காட்சி மூலம் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன்.

நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் காணொலி மூலம் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. தீரன் சின்னமலை பெயரை கல்லூரிக்கு வைத்ததற்கு பாராட்டுகள். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்லூரி கட்ட ஏற்பாடு செய்து கட்டி முடிக்கப்பட்டது. திருப்பூர் பகுதியில் உள்ள பெண்களுக்கான கல்லுரியாக இன்று மாறியுள்ளது. திமுக ஆட்சியில் தான் திருப்பூருக்கு 2 பெண்கள் கல்லுரி தொடங்கப்பட்டது.

கொங்கு சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமாக மாற்றியவர் கலைஞர். தமிழ்நாடு மாணவர்கள் உலகமெங்கும் சென்று சாதிக்க வேண்டும். திரும்பும் பக்கமெல்லாம் பள்ளியும், கல்லூரியும் உருவாக்கப்பட்டதால் இன்றைக்கு வீடுகள்தோறும் பட்டதாரிகள் வளம் வருகின்றனர். சமூக அமைப்புகளும் சேவை மனப்பான்மையுடன் பள்ளி, கல்லூரிகள் தொடங்கியுள்ளனர்.

அதனால்தான் கல்வி நீரோடை தடை இல்லாமல் நாடு முழுவதும் பாய்கிறது. இந்த கல்வி வாய்ப்பு எல்லாம் தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக்க வேண்டும். முக்கியமாக பெண்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். உயர்கல்விகளை பெண்கள் அதிகம் படிக்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிக்க தான் அரசி பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்படுகிறது பெண்களுக்கு விடியல் பயணம் என்ற கட்டணமில்லா பேருந்து வசதியை செய்து கொடுத்துள்ளோம்.

என்னுடைய கனவு எல்லாம் தமிழக மாணவ, மாணவிகள் உலகமெல்லாம் சென்று சாதிக்க வேண்டும். நீங்கள் சாதிக்கிறதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைய வேண்டும். பெண்களை வீட்டுக்கு உள்ளே முடக்கும் காலம் எல்லாம் போய், பெண்கள் உலகை ஆளும் காலம் வந்துவிட்டது. வாங்க உலகம் உங்களுக்காக காத்திருக்கிறது, படித்து முன்னேறி வாங்க வரலாற்றில் உங்களுக்கான இடம் காத்திருக்கிறது. இதற்கெல்லாம் அரசை போலவே சமூக அமைப்புகளும் கல்வியும், மருத்துவத்திலும் சேவை ஆற்ற வேண்டும் என கேட்டுகொள்ளவதாக தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

6 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

7 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

8 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

9 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

9 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

10 hours ago

This website uses cookies.