ஆளுநரின் வேலையே ராஜ்பவன் மாளிகையை சுத்தமாக வைத்துக் கொள்வது தான் அதை மட்டும் அவர் பார்த்துக்கொண்டால் போதும் என திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த பார்க்கிறார்கள். அதற்கெல்லாம் பயந்தவர்கள் நாங்கள் அல்ல.
ஆளுநர் என்பவர் ரப்பர் ஸ்டாம்பு தானே. அவருடைய வேலை ஆளுநர் மாளிகையை சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டுமே. அதைவிட்டு எதற்காக தனக்கு தெரியாத ஒன்றை பேச வேண்டும். அரசியல் செய்வது ஆளுநரின் வேலை கிடையாது.
ஆளுநரின் அரசியல் செய்ய வேண்டும் என நினைத்தால் அவர் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு வந்து அரசியல் செய்யட்டும் என தயாநிதிமாறன் ஆவேசமாக கூறினார்.
தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி எப்போது நியமிக்கப்பட்டாரோ அன்று முதல் ஆளுங்கட்சியுடனான மோதல் அதிகரித்து வருகிறது. ஆளுநர் ரவியின் சர்ச்சை பேச்சுக்களுக்கு திமுக தரப்பில் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.