ஊரடங்கு குறித்து மருத்துவக் குழுவினருடனான முதலமைச்சரின் ஆலோசனை நிறைவு : விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!
29 August 2020, 5:35 pmசென்னை : 7வது கட்ட ஊரடங்கு 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. இதுவரையில் 4 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 7,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 7வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்புகளை பொறுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 7வது கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர்களுடன் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது, ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.