வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
30 November 2020, 9:14 pmசென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையை அண்மையை கடந்தது. இதனால், புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஆனால், பெரிதாக எந்த பாதிப்போ, சேதமோ ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாலும், தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு, அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாலும், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இருப்பினும், சில பகுதிகளில் மழை வெள்ள நீரால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புரெவி புயல் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவ மழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நண்பல் 12 மணியளவில் நடக்கும் கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
0
0