சென்னை : 4 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் வரும் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர அவசரமாக டெல்லி செல்ல இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
4 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். முதற்கட்டமாக துபாய் சென்ற அவர், அங்குள்ள உலக கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, துபாய் அமைச்சர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழலை எடுத்துக் கூறி, தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
பின்னர், அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து பேசி அவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, ரூ.2,600 கோடியிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
துபாய் பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அபுதாபிக்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அபுதாபியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாளையுடன் அவரது துபாய் பயணம் முடிவடைய உள்ள நிலையில், நேரடியாக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அங்கு 3 நாட்கள் தங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு தங்கியிருந்து 31ம் தேதி பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது, நீட் விலக்கு மசோதா மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை கொடுக்க உள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஏப்.,1ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.