நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையாவது ஆளுநர் ஆர்என் ரவி இங்கேயே இருக்கட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் புருஷோத்தமன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து, மணமக்களை வாழ்த்தி மேடையில் அவர் பேசியதாவது :- இந்த திருமணம் சீர்திருத்த மற்றும் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சீர்திருத்த திருமணங்களுக்கு அண்ணா முதல்முறையாக முதலமைச்சராக 1967ல் பொறுப்பேற்றவுடன் சட்டப்பூர்வமாக்கினார்.
சென்னை மாநகரில் கட்டிய பாலங்களுக்கு ஒதுக்கிய தொகையை விட குறைத்து கட்டி, மீதிப்பணத்தை திரும்பக் கொடுத்தோம். ஆனால் அடுத்து வந்து அதிமுக, இந்த பாலத்தில் ஊழல் நடந்துள்ளது என கூறி ஜெயலலிதாவால் இரவோடு இரவாக கலைஞரை கைது செய்தார். அப்போது இந்த வழக்கை பொதுநல வழக்கு போட்டு போராடியவர் புருஷோத்தமன்.
பெரிய பதவியில் அமர்ந்து கொண்டு, பங்களாவில் இருந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இன்று இங்கு நடந்திருக்கும் திருமணம் தான் திராவிடம். திராவிடம்னா என்ன என கேட்க வைத்திருக்கிறதே அது தான் திராவிடம். இரண்டு நாட்களாக புருடா விட்டு கொண்டிருக்கிறாங்க அதையெல்லாம் பார்த்து இருப்பீர்கள்.
ஆளுநர் தொடர்ந்து இங்கையே இருக்கட்டும். அது இன்னொரு பிரச்சாரத்திற்கு வலுவாக சேர்ந்து கொண்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தயவு செய்து இங்கு இருக்கும் ஆளுநரை மட்டும் மாற்றி விடாதீர்கள். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது இருக்கட்டும். மோடி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும், எனக் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.