நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையாவது ஆளுநர் ஆர்என் ரவி இங்கேயே இருக்கட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் புருஷோத்தமன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து, மணமக்களை வாழ்த்தி மேடையில் அவர் பேசியதாவது :- இந்த திருமணம் சீர்திருத்த மற்றும் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சீர்திருத்த திருமணங்களுக்கு அண்ணா முதல்முறையாக முதலமைச்சராக 1967ல் பொறுப்பேற்றவுடன் சட்டப்பூர்வமாக்கினார்.
சென்னை மாநகரில் கட்டிய பாலங்களுக்கு ஒதுக்கிய தொகையை விட குறைத்து கட்டி, மீதிப்பணத்தை திரும்பக் கொடுத்தோம். ஆனால் அடுத்து வந்து அதிமுக, இந்த பாலத்தில் ஊழல் நடந்துள்ளது என கூறி ஜெயலலிதாவால் இரவோடு இரவாக கலைஞரை கைது செய்தார். அப்போது இந்த வழக்கை பொதுநல வழக்கு போட்டு போராடியவர் புருஷோத்தமன்.
பெரிய பதவியில் அமர்ந்து கொண்டு, பங்களாவில் இருந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இன்று இங்கு நடந்திருக்கும் திருமணம் தான் திராவிடம். திராவிடம்னா என்ன என கேட்க வைத்திருக்கிறதே அது தான் திராவிடம். இரண்டு நாட்களாக புருடா விட்டு கொண்டிருக்கிறாங்க அதையெல்லாம் பார்த்து இருப்பீர்கள்.
ஆளுநர் தொடர்ந்து இங்கையே இருக்கட்டும். அது இன்னொரு பிரச்சாரத்திற்கு வலுவாக சேர்ந்து கொண்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தயவு செய்து இங்கு இருக்கும் ஆளுநரை மட்டும் மாற்றி விடாதீர்கள். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது இருக்கட்டும். மோடி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும், எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.