சென்னை ; ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலினும், முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் ஒரே வருடத்தில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாரித்ததாக அந்த ஆடியோவில் கூறியது திமுகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றன. எனினும், இந்த ஆடியோ பொய்யானது என்று பழனிவேல் தியாகாரஜன் விளக்கம் அளித்து இருந்தார்.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் நடப்பதாகவும், இதில் யாருக்கும் விளம்பரம் தேடி கொடுக்க விரும்பவில்லை என்று உங்களில் ஒருவன் நிகழ்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.
இந்த நிலையில், நேற்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினையும் சந்தித்து பிடிஆர் பழனிவேல் தியாகரஜன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.