சென்னை : திரைத்துறைக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நந்தனத்தில் நடந்த தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது :- கொரோனாவினால் பல துறையினரும் பாதிக்கப்பட்டனர். அதில் திரைத்துறையும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் திரைத்துறை மீண்டு முன்னேறி வருகிறது. திமுகவையும், திரைத்துறையையும் பிரிக்க முடியாது. திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழகம். நானும் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளேன். திரைத்துறையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால், ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளேன்.
திரையுலகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்கும். சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் முற்போக்கு சம்பந்தமான திரைப்படங்களை எடுக்க வேண்டும்
மது ஒழிப்பு, புகைப்பிடித்தல் தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் திரைப்படங்களில் இடம்பெறுகிறது. போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வும் இடம்பெற வேண்டும்.
மனிதனுக்கு கல்வி, நிதி வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், மன வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி வழங்கும் துறையாக திரைத்துறை உள்ளது.
திரைப்படங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும், திரைத்துறையில் திறமையானவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும், எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.