சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி நிகழ்த்திய உரை முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை வளாகத்தில் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தனது உரையை தமிழில் தொடங்கிய ஆளுநர் ஆர்என் ரவி, அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறினார்.
ஆளுநர் உரை தொடங்கியதும், அதனை எதிர்த்து கூட்டணி கட்சிகள் கூச்சல் எழுப்பினர். அமளியில் ஈடுபட்டனர். பின்னர், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இருப்பினும், ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ந்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:- மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும். புயலையும், வடகிழக்கு பருவ மழையையும் தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. நீட் தேர்வு விலக்கு மசோதா ஜனாதிபதியிடம் உள்ளது.
மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும், என அறிவித்தார். இறுதியில் வாழிய தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என தனது உரையை நிறைவு செய்தார்.
அவரது உரையில், 3ம் பக்கத்தில் இருந்த ‘திராவிட மாடல்’எனும் வார்த்தையை தவிர்த்தார் ஆளுநர் ஆர்என் ரவி. அதேபோல, சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாகத் திகழ்கிறது, இதனால், பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற பகுதியில், ஆளுநர் அமைதிப் பூங்கா என்னும் வார்த்தையை தவிர்த்தார்.
இதையடுத்து, திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அதாவது, தமிழக அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை; அரசு தயாரித்த ஆளுநர் உரையை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்ற வேண்டும், எனக் கூறினார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் அவையில் இருந்து பாதியில் வெளியேறினார். அதற்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.