கடைசி இடத்தில் பட்டியலின பெண் அமைச்சர்.. கொஞ்சமும் கூசாமல் பாலின சமத்துவம் பற்றி CM பாடம் எடுக்கிறார் : வானதி சீனிவாசன் விமர்சனம்!!

கடைசி இடத்தில் பட்டியலின பெண் அமைச்சர்.. கொஞ்சமும் சுசாமல் பாலின சமத்துவம் பற்றி CM பாடம் எடுக்கிறார் : வானதி சீனிவாசன் விமர்சனம்!!

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சட்ட மசோதாவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த 9 ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை ஏன் கொண்டு வரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, “சாதி வேறுபாடுகளற்ற சமத்துவமும், பாலின சமத்துவமும் நாகரிக சமூகத்தின் அடையாளங்கள். பாலின சமத்துவம் என்பது அனைத்து வகையிலும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவதாகும். காலம் கடந்து செய்தாலும், கண் துடைப்புக்காக செய்தாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக சார்பில் ஆதரிக்கிறேன்” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஸ்டாலின் தலைவராக உள்ள திமுகவிலும், அவர் முதலமைச்சராக உள்ள தமிழக அரசிலும் பாலின சமத்துவமும் இருக்கிறதா என்றால், மனசாட்சி உள்ள யாரும் இல்லை என்றே சொல்வார்கள்.

கருணாநிதியால் அரசியலால் அடையாளப்படுத்தப்பட்ட கனிமொழி, பெண் என்பதாலேயே திமுகவில் ஓரங்கப்பட்டுள்ளனர். ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமை தாங்கும் அளவுக்கு திறமை இருந்தும், அவருக்கு பத்தோடு பதினொன்றாக துணைப் பொதுச்செயலர் பதவிதான்.

அதுபோல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மகள் இருந்தும், மகனைத்தான் அரசியலுக்கு கொண்டு வந்து திமுக இளைஞரணிச் செயலாளராக, அமைச்சாரக்கியுள்ளார். ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் எதிரான வாரிசு அரசியலில்கூட, பெண்களை ஒதுக்கி விட்டு ஆண் வாரிசுக்கு மட்டுமே மகுடம் சூட்டியவர்கள்தான் இன்று பாலின சமத்துவம் பற்றி பேசுகிறார்கள்.

எல்லாம் வெறும் பேச்சு மட்டுமே. முதலமைச்சரையும் சேர்த்து 35 பேர் கொண்ட திமுக அமைச்சரவையில் இருவர் மட்டுமே பெண்கள். அமைச்சரவை பட்டியலில் 35-வது இடத்தில் அதுவும் கடைசி இடத்தில் இருப்பவர் பெண் அமைச்சர் கயல்விழி. அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.

இப்படி அமைச்சரவையில் பெண்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்காமல், பட்டியலின பெண் அமைச்சரை கடைசி இடத்தில் வைத்துவிட்டு, கொஞ்சமும் கூசாமல், பாலின சமத்துவம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அமைச்சரவையில் 11 பெண்கள் உள்ளனர். நிதி போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களாகவும் பெண்கள் உள்ளனர். மாநில ஆளுநர்களாகவும் பெண்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலின ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதுதான் பாலின சமத்துவம். பெண்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ளும் அதிகாரத்தை அளிப்பது சமூக நீதி. இவற்றை செய்யாமல், பாலின சமத்துவம், சமூக நீதி என பேசிக் கொண்டே, பெண்களுக்கான அதிகாரத்தை மறுக்கிறது திமுக.

திமுக என்பது வாரிசு, ஊழலில் திளைக்கும் கட்சி. வாரிசு என்றாலே அங்கு ஆணாதிக்கம் வந்துவிடும். பெண்களுக்கு உரிமை மறுக்கப்படும். எனவே, மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்ததால், இந்திய வரலாற்றில் மகத்தான இடத்தை பிடித்ததோடு, மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்களின் மனங்களையும் பிரதமர் மோடி வென்றுள்ளார்.

இதை பொறுக்க முடியாமல் வழக்கம்போல, வன்மத்தை கக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். முடிந்தால் திமுக கட்சி, ஆட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவமும், அதிகாரமும் வழங்கட்டும். அவர் என்னதான் செய்தாலும், 2024ல் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதை தடுக்க முடியாது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.