சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவை பந்தைய சாலை காவல்நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
மேலும் படிக்க: ரூ.34,000 கோடி வங்கிக்கடன் மோசடி…. DHFL நிறுவன இயக்குநர் அதிரடி கைது…!!
இதனிடையே, கஞ்சா கடத்தல், அவதூறாக பேசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சவுக்கு சங்கரை சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.
சவுக்கு சங்கரை தொடர்ந்து, அவரை பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவை பந்தைய சாலை காவல்நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி, இரு பிரிவினர் இடையே சாதிக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
This website uses cookies.