திருவள்ளூர் : பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவி ஒருவரை பேராசிரியர் வீட்டிற்கு அழைத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவியிடம், அதே துறையில் கல்லூரி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த மகேந்திரன் தனது செல்போனில் மாணவிக்கு தனது வீட்டிற்கு வருமாறும்.. வா பழகலாம் என்றும் பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இது குறித்து அந்த மாணவி கடந்த வியாழக்கிழமை கல்லூரி முதல்வர் சேகரிடம் அளித்த புகாரின் பேரில், இது பற்றி, விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கல்லூரி முதல்வர் சேகர் தலைமையில் மகளிர் குறை தீர்க்கும் மன்றம் மூன்று உதவிப் பேராசிரியர்கள் மூலம் சம்பவம் தொடர்பாக மாணவி மற்றும் உதவிப் பேராசிரியரிடம் விசாரணை செய்யப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக கல்லூரிகளின் இயக்குனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவியிடம் தவறாக செல்போனில் பேசியது குறித்து பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், கல்லூரி உதவி பேராசிரியர் மகேந்திரனிடம் கல்லூரி முதல்வர் முன்னிலையில் மாணவியிடம் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர்.
தற்போது புகாரில் சிக்கியுள்ள உதவி பேராசிரியர் மீது ஏற்கனவே இது போன்ற சில புகார்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும், கல்லூரி மாணவியிடம் பேசிய ஆடியோ விவரம் உண்மை நிலவரம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மூன்றாம் ஆண்டு பயிலும் அனைத்து கல்லூரி மாணவிகளிடம் கல்லூரி உதவி பேராசிரியர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர் .
உதவிப் பேராசிரியர் கைது செய்து விசாரணைக்காக போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது வாகனத்தை வழிமறித்து நுழைவுவாயில் முன்பாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தி உதவிப் பேராசிரியரை வாகனத்தில் அழைத்து சென்றனர்.
கல்லூரி உதவிப் பேராசிரியர் 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது ஓய்வுபெற உள்ள நிலையில் மாணவியின் புகாரில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.