தமிழக காங்கிரஸில் நடக்கும் மர்மம்…? கேஎஸ் அழகிரிக்கு எதிராக EVKS இளங்கோவன் வாய்ஸ் ; வெடித்தது உள்கட்சி மோதல்!!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தனக்கு தெரியவில்லை என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் தலைவர் மர்மமான கூட்டத்தை கூட்டுவது போல காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவதாக விமர்சனம் செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, “ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தரம் குறித்தும் காலதாமதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் கலவை தரம் சந்தேகமாக இருப்பதால் சிமெண்ட் கலவையை தரம் குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு விருதுகள் வழங்க அரசுக்கு பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளது. பொன்முடி ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பாக முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். இதனை தமிழகத்தில் உள்ள ஊராட்சியில் செயல்படுத்த பொதுக்கணக்கு குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

ஈரோடு மாவட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்தும், 2017ம் ஆண்டு  மாதம் தோறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அரசாணையை வெளியிடப்பட்டது. இதனை முறையாக மாதம்தோறும் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் முன்னிலையில் ஆய்வுக்குழு அமைக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். 

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது :- தமிழகத்தில் உள்ள ஆளுநருக்கு அடிப்படையில் சில பிரச்சனைகள் உள்ளது அவருக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கிறேன். ஆளுநர் நடவடிக்கையில் கடந்த நான்கு நாட்களில் பல மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர் மனிதராக மாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.  

தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கூட்டம் என்றால் என்னை போன்றவர்களுக்கு அழைப்பு வரும் ஏன்…? என்று தெரியவில்லை. மர்மமான கூட்டமோ என்று தெரியவில்லை. பத்திரிகை வாயிலாக தான் சத்தியமூர்த்தி பவனில்  கூட்டம் நடத்தப்படுவதாக தெரிந்து கொண்டேன். மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு என்று சொல்லவில்லை, என்னை பொறுத்தவரை என்னை முதலில் மூத்த தலைவர் என்று சொன்னார்கள். பிறகு முன்னாள் தலைவர்கள் என்று சொன்ன நிலையில், தற்போது முடிந்து போன தலைவர்கள் என்று சொல்கிறார்கள். 

செந்தில் பாலாஜி தலையில் இருந்து கால் வரை உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், முதலில் தகுந்த சிகிச்சை தரவேண்டும். ஐந்து மாநில இடைத்தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி பஞ்ச பாண்டவர்கள் போல் வெற்றி பெறுவோம், என கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.