பாஜக அதிமுக கூட்டணிப் பிளவு இரு காதலர்களுக்கு இடையேயான பிரிவா அல்லது நிரந்தர விவாகரத்து என எனக்கு தெரியவில்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்ள கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்கு வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :-
ஐ.என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற்று வருகிறது. நடக்க இருக்கக்கூடிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில், அதன் விளைவை பார்த்தீர்கள். காங்கிரஸ் கட்சி சமூக வெற்றி பெற இருக்கிறது. பாஜக படுதோல்வி அடைய உள்ளது.
குறிப்பாக, தெலுங்கானாவில் பாஜக ஒற்றை இழக்க இடத்தில் மட்டும் தான் வெற்றி பெறப் போகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை 39 இடங்களிலும் ஐ.என்.டி..ஏ கூட்டணி அமோக வெற்றி பெற இருக்கிறது.
பாஜகவின் இந்துத்துவா அரசியல் வடமாநிலங்களுக்கு மட்டுமே சரியாக அமையும், அது முற்றிலும் வெஜிடேரியன் இந்துத்துவா அரசியல். தமிழகத்தை பொறுத்தவரை ஆடு, கோழி பலியிடும் சுவாமிகளும் உள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியுடன் ஒன்பது தொகுதியில் போட்டியிட்டோம். தற்பொழுது அதைவிட அல்லது அதற்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதுதான் விருப்பம்.
காவிரி நீர் பிரச்சனை என்பது இரு கட்சிகளுக்கு இடையே அல்லது இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினை அல்ல, இதனை நிபுணர்கள் மூலமாகத்தான், உணர்ச்சி ரீதியாக தீர்வு காண முடியாது. பாஜக அதிமுக கூட்டணிப் பிளவு இரு காதலர்களுக்கு இடையேயான பிரிவா அல்லது நிரந்தர விவாகரத்து என எனக்கு தெரியவில்லை, எனக் கூறினார்.
பாஜக அதிமுக கூட்டணிப் பிளவு இரு காதலர்களுக்கு இடையேயான பிரிவா அல்லது நிரந்தர விவாகரத்து என எனக்கு தெரியவில்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்ள கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்கு வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- ஐ.என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற்று வருகிறது. நடக்க இருக்கக்கூடிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில், அதன் விளைவை பார்த்தீர்கள். காங்கிரஸ் கட்சி சமூக வெற்றி பெற இருக்கிறது. பாஜக படுதோல்வி அடைய உள்ளது.
குறிப்பாக, தெலுங்கானாவில் பாஜக ஒற்றை இழக்க இடத்தில் மட்டும் தான் வெற்றி பெறப் போகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை 39 இடங்களிலும் ஐ.என்.டி..ஏ கூட்டணி அமோக வெற்றி பெற இருக்கிறது.
பாஜகவின் இந்துத்துவா அரசியல் வடமாநிலங்களுக்கு மட்டுமே சரியாக அமையும், அது முற்றிலும் வெஜிடேரியன் இந்துத்துவா அரசியல். தமிழகத்தை பொறுத்தவரை ஆடு, கோழி பலியிடும் சுவாமிகளும் உள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியுடன் ஒன்பது தொகுதியில் போட்டியிட்டோம். தற்பொழுது அதைவிட அல்லது அதற்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதுதான் விருப்பம்.
காவிரி நீர் பிரச்சனை என்பது இரு கட்சிகளுக்கு இடையே அல்லது இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினை அல்ல, இதனை நிபுணர்கள் மூலமாகத்தான், உணர்ச்சி ரீதியாக தீர்வு காண முடியாது. பாஜக அதிமுக கூட்டணிப் பிளவு இரு காதலர்களுக்கு இடையேயான பிரிவா அல்லது நிரந்தர விவாகரத்து என எனக்கு தெரியவில்லை, எனக் கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.