சரியா, கணக்கு தெரியல.. கண்டிப்பா இது சாதனைதான்… சிபிஐ ரெய்டை கலாய்த்த கார்த்தி சிதம்பரம்..!!

Author: Babu Lakshmanan
17 May 2022, 10:48 am
Quick Share

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தனது வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதனை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கலாய்த்துள்ளார்.

சீனர்களுக்கு விசா வாங்கித் தருவதில் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகவும் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், எம்பியுமான கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Karthik chidambaram - updatenews360

இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 9 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகளின் இந்த சோதனையை கிண்டல் செய்து எம்.பி. கார்த்தி சிதம்பரம் டுவிட் போட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்?, தனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் எத்தனை முறை சோதனை செய்தனர் என்ற கணக்கு மறந்துவிட்டதாகவும், சிபிஐ சோதனையில் இது ஒரு சாதனையாக இருக்கக்கூடும் என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவிற்கு ஆதரவாகவும், கலாய்த்தும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 637

0

0