காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே அந்தோணியின் மகன் பாஜகவில் இன்று இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமாக பதவி வகித்தவர் ஏ.கே. அந்தோணி. வயது முதிர்வால் இவர் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இவரது மகன் அனில் கே அந்தோணி காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தார்.
இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு எதிரான பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். அதாவது, “இந்திய அமைப்புகளின் மீதுள்ள பி.பி.சி.யின் பார்வையானது, இந்திய இறையாண்மையின் வலிமையை குன்ற செய்து விடும்,” என டுவிட்டரில் பதிவிட்டார்.
அவரது இந்தப் பதிவிற்கு காங்கிரஸில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தப் பதிவை நீக்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த அவர், கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, அவர் பாஜகவில் இணைவார் என்று தகவல் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், அனில் கே. அந்தோணி மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் வி முரளீதரன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்து உள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, உறுப்பினர் அட்டையையும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கினார்.
ஏற்கனவே, பல்வேறு விதங்களில் பாஜக நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் கட்சி தாவுவது டெல்லி தலைமைக்கு வேதனை உருவாக்கியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.