மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் சதி.. பாஜக ஆட்சியால் பெண்களின் உரிமை பறிபோகிற்து : முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி திமுக மகளிர் அணி சார்பில் இந்த மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு பெண் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் மாநாட்டிற்கு வருகை தந்துள்ள பெண் தலைவர்களை வரவேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார், அப்போது பேசிய அவர், இந்திய அரசியல் வானில் கம்பீர பெண்மணியாக நின்றவர் சோனியா காந்தி.
இளம் அரசியல் ஆளுமையாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா காந்தி, நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசும்போது தலைவராக மட்டுமல்ல, அண்ணனாக பெருமைப்படுகிறேன். தங்கை கனிமொழி தமிழ்நாட்டில் இந்திய சங்கமத்தை நடத்தி காட்டி உள்ளார்.
பெண் இனத்தின் எழுச்சியின் போல் திமுகவின் மகளிர் உரிமை மாநாடு நடக்கிறது. தமிழ்நாட்டின் பெண்கள் மாநாடு என்று இல்லாமல் இந்தியாவின் பெண்கள் மாநாடு போல் நடைபெற்று இருக்கிறது.
33 சதவீத இட ஒதுக்கீடு என்று கூறி பெண்களை ஏமாற்ற பாஜக சதி செய்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக செயல்படுத்தி இருந்தால் பாராட்டி இருக்கலாம்.
பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று பாஜக ஆட்சி நினைக்கிறது. பாஜக ஆட்சியில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 2024-க்கு பிறகு மோடி ஆட்சி இருக்காது என்பதை மக்கள் முடிவு செய்து விட்டனர். ஒற்றுமையாக இருந்தால் பாஜகவை வீழ்த்தலாம் என அவர் கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.