தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. முக்கிய பிரமுகரை கொலை செய்ய சதி : நாட்டு வெடிகுண்டு வைத்த இளம்பெண்!!!

முக்கிய பிரமுகரை கொலை செய்ய சதி.. நாட்டு வெடிகுண்டு வைத்த இளம்பெண் கைது : தமிழகத்தில் அதிர்ச்சி!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட குண்டு குளம் ஜங்ஷனில் வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்த போது , இரு சக்கர வாகனம் ஒன்று வேகமாக கடக்க முயன்றது.

அதை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரிக்க முயன்ற போது , தப்பி ஓட முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேரை மடக்கி பிடித்து பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அந்த பெண் வைத்திருந்த பையை சோதனை செய்த போது காவல் துறையினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அந்தப் பையில் கன்ட்ரி பாம் எனப்படும் நாட்டு வெடிகுண்டும், இரண்டு பட்டா கத்திகளும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.

அவர்களிடமிருந்து, ஒரு நாட்டு வெடிகுண்டு, இரண்டு பட்டாக்கத்திகள், அரை கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்து விசாரித்ததில், அந்த இளம் பெண்ணின் பெயர் தமிழரசி (வயது 22) என்பதும், உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியை சேர்ந்த இந்தப் பெண் சில மாதங்களாக காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் தங்கியிருந்து, பாலியல் தொழில் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அந்தஇளம் பெண்ணுடன் பிடிப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 25) என்பதும் பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் என்றும், மற்றொரு இளைஞர் பெயர் “நோய் வசந்த்” (வயது 22) , 5 க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்தது.

தமிழரசியிடம் இருந்து நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்து முசரவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு எக்ஸ்ப்ளோர் குடோனில் வைத்து உள்ளனர்.

மேலும் பட்டாகத்திகள், கஞ்சா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து 3 பேரையும் காஞ்சிபுரம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி சென்னை மத்திய‌ சிறைக்கு கொண்டு சென்றனர்.

பிடிபட்ட மூன்று பேரிடம் காவல் துறையினர் விசாரித்த போது, ஒரு முக்கிய பிரமுகரை கொல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரியவந்தது.

விடியா திமுக ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை செய்து வரும் கலாச்சாரம் பெருகி வருகின்றது .

அதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் ஒரு இளம் பெண்ணே நாட்டு வெடி ஒன்றை மறைத்து வைத்து ஒரு முக்கிய பிரமுகரை கொல்ல திட்டமிட்டு வந்த செயல் காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டு வெடி குண்டுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயார் செய்யப்படுகின்றதா அல்லது வேறு மாநிலத்திலிருந்து வாங்கி வந்த இங்கு பயன்படுத்துகின்றனவா என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றார்கள்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

9 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

9 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

10 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

11 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

11 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

11 hours ago

This website uses cookies.