தமிழகத்தில் தொடர் கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
Author: Aarthi Sivakumar1 November 2021, 8:53 am
சென்னை: தொடர் கனமழை எதிரொலியாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால்,தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் வருகிற நவம்பர் 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், கடலூரில் தொடர் கனமழையால் இன்று விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலியாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் என மேலும் 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
0
0