திமுகவில் வாரிசு அரசியல் நடந்து வருவது அனைவருக்கும் கண் கூடு. இதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
கருணாநிதி இருந்த காலத்திலேயே அவரது மகன்கள் கட்சியில் பணியாற்றி வந்தனர். பின்னர் திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றார்.
கருணாநிதி மறைவை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது திமுக. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுபேற்ற 2 வருடங்களில் அவரது மகன் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஒரே நேரத்தில் தந்தை முதலமைச்சராக, வாரிசு அமைச்சராக பதவியில் இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
திமுகவில் கருணாநிதி இருக்கும் போதே இதெல்லாம் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதே போல மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் மறைவுக்கு பின் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராகவும், தற்போது எம்பியாக உள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனது மகனான கலாநிதி வீராசாமி, மூத்த அமைச்சராக துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த், ஐ.பெரியசாமி தனது மகன் ஐ.பி.செந்தில்குமார், அமைச்சர் பொன்முடி தனது மகன் தெய்வசிகாமணி, திமுக பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலு தனது மகன் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன், கே.என்.நேருவின் மகன் அருண் என திமுக வில் உள்ள மூத்த அமைச்சர்களின் மகன்கள் தற்போது எம்பியாக, அமைச்சராக, எம்எல்ஏவாக பதவியில் உள்ளனர்.
அந்த வரிசையில், புதியதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திமுக மருத்துவ மணி துணைச் செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட டாக்டர் வல்லவன் ஒன்றிய கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக டாக்டர்.ஆர்.கே.தீலிப்குமார் திமுன மருத்துவ அணி துணைச்செயலாளராக தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாநில மருத்துவ அணி நிர்வாகிகளுடன் இணைந்து கழகப்பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.