9 ஆடம்பர கார்கள்: மாளிகை போல் வீடு: தூய்மைப் பணியாளராக பணிபுரியும் கோடீஸ்வரர்: சிக்கியது எப்படி…!!

உத்திரபிரதேசம் கோல்கோண்டா மாவட்டத்தில் நகர் கோட்வாலி பகுதியில் கமிஷனர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக இருப்பவர் சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வால்.

அவர் பணியாற்றும் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள முக்கியமான கோப்புகள் அடிக்கடி மாயமாகி விடுவதாகவும், அதில் உள்ள அரசு தகவல்கள் கசிய விடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வாறு காணாமல் போகும் அரசாங்க பைல்களில் உள்ள தகவல்களை திருத்தி சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வால் ஏராளமான சொத்துகள் குவித்துள்ளார், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கமிஷனர் யோகேஸ்வர் ராம் மிஸ்ராவுக்கு புகார்கள் வந்தது.இதையடுத்து உரிய விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.

விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது புகாருக்கு ஆளான சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வாலுக்கு இருக்கும் சொத்துகளே அதற்குக் காரணம். மொத்தம் அவர் 9 சொகுசு கார்களை வைத்துள்ளார். இதுதவிர, சொகுசான, நவீன வசதிகள் கொண்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வீடுகளும் அவருக்கு உள்ளன. அவர் வைத்துள்ள சொகுசு கார்கள் பற்றிய விவரங்களை அனுப்புமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் போலீசார் கேட்டுள்ளனர்.

5 ஆண்டுகளில் அவரின் வங்கிக் கணக்கில் நடந்த பணப்பரிமாற்றம் பற்றிய விவரங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.உரிய விசாரணைக்கு பின்னரே அவருக்கான சொத்து மதிப்புகள் எவ்வளவு என்பது தெரிய வரும்.

விசாரணைகளின் முடிவில் தூய்மைப் பணியாளர் ஜெய்ஸ்வால் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.